‘நிச்சயம் வருவேன்’ – முன்னாள் அமைச்சர் ஒருவருடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியீடு…!

  • முன்னாள் அதிமுக அமைச்சர் ஆனந்தனுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
  • தொண்டர்களுக்காக கட்சியை மீட்டெடுக்க நிச்சயம் வருவேன்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

சமீப நாட்களாக, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஆனந்தனுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. தொண்டர்களுடன் மட்டுமே சசிகலா பேசுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவருடன் சசிகலா பேசியிருக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜெயலலிதா 1991-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த  போது, ஆனந்தன் அமைச்சராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆனந்தனுடன், சசிகலா அவர்கள் கூறுகையில், கட்சி நமது கண்ணெதிரே சீர்குலைந்து போவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. எனவே தொண்டர்களுக்காக கட்சியை மீட்டெடுக்க நிச்சயம் வருவேன் என கூறியுள்ளார். ஏற்கனவே இதுபோல தொண்டர்களுடன் பேசும் வீடியோ வெளியாகி இருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் ஒருவருடன் பேசும் வீடியோ வெளியாகியிருப்பது அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.