#BREAKING: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டி உள்ளது : காவல்துறை..!

#BREAKING: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டி உள்ளது : காவல்துறை..!

  • அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
  • மணிகண்டன் முன்ஜாமின் மனுவை ஏற்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் புகார் தெரிவித்தார்.

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நடிகை தாக்கல் செய்த மனு நீதி மன்றத்திற்கு வராததால் வழக்கு விசாரணையை வருகின்ற 9-ஆம் தேதி (அதாவது இன்று) ஒத்தி வைக்கப்பட்டது. அதுவரை மணிகண்டனை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், மணிகண்டனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே மணிகண்டன் முன்ஜாமின் மனுவை ஏற்க கூடாது என்று முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

author avatar
murugan
Join our channel google news Youtube