ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 16-ம் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்- முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  புதுச்சேரியில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார்.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்த விடமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் .ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 16-ம் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.