நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம்…! மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக – ஈபிஎஸ்

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க பெறவில்லை. மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். 

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சி தேர்தல் எடப்பாடி பழனிசாமி அவர்கள், திருப்பத்தூரில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், இந்த 4 மாதங்களில் திமுக அரசு, அதிமுக கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடுவது, அவதூறு பிரச்சாரம் செய்வது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெயிடு பண்ணுவது இதைத்தான் அவர்களுடைய பணியாக இருக்கிறது. மக்களை பற்றி சிந்திக்கவில்லை. இவர்களுடைய ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க பெறவில்லை. மக்களுக்காக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். நான் நினைத்திருந்தால் திமுக மீது  எவ்வளவோ வழக்குகள் போட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.