கொரோனா நிவாரண நிதி விவரத்தை வெளியிட – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு .!

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி மூலம் பெறப்பட்ட நிதி எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்தது.? என்ற விவரங்கள்  அறிவிக்கவில்லை எனக் கூறி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் அளித்த அந்த மனுவில், முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கியவர்கள் யார் யார்..?  என்பது குறித்த எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை எனவே முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகையை பொதுமக்கள் தெரிந்துகொள்ள இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறினார்.

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்  வழக்கறிஞர் கூறுகையில்,  மற்ற மாநிலங்களில் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகை குறித்து வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில்தான் வெளியிடப் படவில்லை என கூறினார். இதுகுறித்து  பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு யார் யார் எவ்வளவு ..?தொகை கொடுத்திருக்கிறார்கள் என்பது குறித்த முழு விவரத்தை தமிழக அரசு இணையதளத்தில் 8 வாரதத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

author avatar
murugan