கனமழை எதிரொலி…! நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு …!

கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பல்கலைகழக துணைவேந்தர் கூறுகையில், கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஒத்திவைக்கப்பட்ட நாளைய தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

அதேபோல்  சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட  ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகையில், மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நாளை சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment