ஜி.எஸ்.டி. ஆணையர் லஞ்சப் புகாரின் பேரில் கைது !

ஜி.எஸ்.டி. ஆணையர் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் லஞ்சப் புகாரின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

Image result for Sansar Chand gst

ஜி.எஸ்.டி. ஆணையராக இருந்த சன்சார் சந்த் (Sansar Chand) என்பவர் தொழிலதிபர்களிடம் இருந்து வாரக் கணக்கிலும், மாதக் கணக்கிலும் லஞ்சம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து சன்சார் சந்த் ஒருலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்தனர். இது தொடர்பாக இரண்டு கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 3 அலுவலர்கள் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 5 பேர் என மேலும் 8 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment