காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு !

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமைப் பதவியில் பெண்களை ஒருபோதும் அமர்த்தியதில்லை எனக் தெரிவித்துள்ளார்.

மேகாலய மாநிலம் சில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் கல்லூரியில் பெண்களிடையே பேசிய ராகுல்காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

அந்த அமைப்புத் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அதன் தலைமைப் பதவியில் ஒரு பெண்கூட இருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி தன்னுடைய இயக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்ததாகவும், அதேநேரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment