BIGG BOSS 5 : இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் ….!

இந்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் எவிக்ஷனில் இருந்து சுருதி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரத்துக்கான தலைவர் யார் என்பது குறித்த தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போட்டியாளர்களின் உருவங்கள் மாட்டிய பொம்மைகள் செய்யப்பட்டு யார் தலைவராக விருப்பம் இல்லையோ அந்த பானையை உடைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அக்ஷராவின் உருவ … Read more

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் டோல் பூத் ஊழியரை அறையும் காட்சி வைரல்.!

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆளும் தலைவர் டோல் பூத் ஊழியர்களை அச்சுறுத்தும் மற்றும் கன்னத்தில் அறைந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை, செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ ஒரு வீடியோவை வெளிட்டுள்ளது, அதில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள டோல் பூத்தை கடந்த செல்ல முயன்ற ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரை டோல் பூத் ஊழியர் தடுத்து நிறுத்தி, அவரிடம் கட்டண வரி செலுத்தச் சொன்னபோது அவர் வரி செலுத்த மறுத்துவிட்டார். இதனால், தனது வாகனத்தின் முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பை ஒய்.எஸ்.ஆர்.சி.பி … Read more

அடுத்த 6 மாதத்திற்கு காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி நீடிப்பார்.!

காங்கிரஸ் கட்சியில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட ஆறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க … Read more

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா ராகுல் காந்தி ? நாளை கூடுகிறது செயற்குழு கூட்டம்.!

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இதன் பின் மக்களைத் தேர்தலில் காங்கிரஸ்  தோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இதனையடுத்து   காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு … Read more

பதவியேற்ற பின் முதல் முறையாக கோவை சென்ற தமிழக பாஜக தலைவர்.!

சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவிப்பு வெளியிட்டார். தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த முருகன், பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. பதவியேற்ற பின்னர் முதல் முறையாக கோவை வந்த எல். முருகனுக்கு, அக்கட்சியினர் கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அங்கு பேசிய அவர், இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய அனைவரையும் காவல்துறையினர் கைது … Read more

பிரிவினைவாத தலைவருடன் பாகிஸ்தான் அமைச்சர் பேச்சுவார்த்தை…!!

பிரிவினைவாதத் தலைவரான மிர்வாய் உமர் பரூக்குடன் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி தொலைபேசியில் பேசியதற்கு தற்போது கண்டனம் எழுந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவரான மிர்வாய்ஸ் உமர் பரூக் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி_யுடன்  தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இருவரின் பேச்சு இந்தியாவின் ஒற்றுமை, நல்லிணக்கம், இறையாண்மை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றது என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதர் சோகைல் மகமூத்துக்கு … Read more

நிலவுக்கு மனிதர்கள்….இஸ்ரோ தலைவர் பேட்டி…!!

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன்  ககன்யான் திட்டம் மூலம் 2021ம் ஆண்டு டிசம்பரில் இந்தியர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்தற்கு சுமார் 10 ஆயிரம் கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.தொடர்ந்து அவர் பேசும் போது டிசம்பர்  2020 மற்றும் ஜூலை 2021 ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்ப தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு !

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமைப் பதவியில் பெண்களை ஒருபோதும் அமர்த்தியதில்லை எனக் தெரிவித்துள்ளார். மேகாலய மாநிலம் சில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் கல்லூரியில் பெண்களிடையே பேசிய ராகுல்காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். அந்த அமைப்புத் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அதன் தலைமைப் பதவியில் ஒரு பெண்கூட இருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மகாத்மா காந்தி தன்னுடைய இயக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்ததாகவும், அதேநேரத்தில் ஆர்எஸ்எஸ் … Read more