பிரபல நடிகரால் நடுத்தெருவுக்கு வந்த பிரபல தயாரிப்பாளர்!

சினிமா துறையில் பெரிய ஹீரோக்களை நடிக்கவைக்காமலே பல ஹிட் படங்களை கொடுத்தவர் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதிஷ். இவர் தற்போது சினிமா துறை முடங்கியுள்ளதால் ரஜினி மற்றும் கமல் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என சமீபத்தில் கூறியிருந்தார்.

நடிகர்களின் சம்பளத்தையும் முறைப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது ஒரு முன்னணி ஹீரோவை தாக்கி பேசினார்.

“சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தவர் தற்போது எல்லா சொத்தையும் விற்றுவிட்டு கஷ்டப்படுகிறார். அது போல ஒரு நடிகருக்கு எந்த அளவுக்கு தரவேண்டுமோ அதை மீறி சம்பளம் கொடுக்கப்படுகிறது” என கூறியுள்ளார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment