#Goodnews:இந்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு – தேர்வுத்துறை அறிவிப்பு!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தேர்வுத்துறை உத்தரவு.

10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி வாரியத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கி தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,

  • 10,11,12 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை தேர்வில் எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாட விலக்கு அளிக்க உத்தரவு.
  • 10 ஆம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு,செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு .
  • 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளரை பணியமர்த்திக்கொள்ள அனுமதி.
  • மாற்றுத்திறன் தேர்வர்கள் தரை தளத்திலேயே தேர்வினை எழுத வசதி.
  • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு போன்ற சலுகைகளுக்கு கூடுதலாக அனுமதி வழங்கி தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.