#ElectionBreaking: எஞ்சிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.!

சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவில் மீதமுள்ள 3 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி 17 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. அதன்படி, தாராபுரம் (தனி ) – எல்.முருகன், கோவை தெற்கு – வானதி சீனிவாசன், காரைக்குடி – ஹெச் .ராஜா, அரவக்குறிச்சி – அண்ணாமலை, நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி, ஆயிரம் விளக்கு – குஷ்பு, துறைமுகம் – வினோஜ் பி.செல்வம் ஆகியோர் இடம்பெற்றிருந்தன.

மேலும், திருவண்ணாமலை – தணிகைவேல், மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி,  திட்டக்குடி – பெரியசாமி, திருவையாறு – பூண்டி வெங்கடேசன், மதுரை வடக்கு – சரவணன், குளச்சல் -பி.ரமேஷ், திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் -டி.குப்புராமு, விருதுநகர் – பாண்டுரங்கன், திருக்கோவிலூர் – வி.ஏ.டி.கலிவரதன் உள்ளிட்டவர்களும் 17 பேரில் இடம்பிடித்திருந்தனர்.

இதனிடையே, திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்திருந்தனர். இரு கட்சிகளும் மீதுமுள்ள தொகுதிகளில் யார் வேட்பாளர் என காத்திருந்த நிலையில், நேற்று எஞ்சிய 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. விளவங்கோடு- விஜயதரணி, வேளச்சேரி – ஜே.எம்.எச்.ஹசன், மயிலாடுதுறை – ராஜகுமார், குளச்சல் – பிரின்ஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், பாஜகவில் மீதமுள்ள 3 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உதகை – போஜராஜன், விளவங்கோடு – ஜெயசீலன், தளி – நகேஷ்குமார் உள்ளிட்டவர்களை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மீண்டும் இந்தியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சியின் மீதமுள்ள வேட்பளார் யார் என்று அறிவிப்புக்கு காத்திருந்த பாஜக, தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்