மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னையில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகிறார். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்து ஓய்ந்த நிலையில் இன்னும் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வருகிறது. கனமழை பெய்த காரணத்தால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக செய்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் சில இடஙக்ளில் மழைநீர் முழுதாக வடியாமல் இருந்து வருகிறது. அப்படி தேங்கி இருக்கும் பகுதிகளுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment