IPL 2024 : என்னை ‘கிங்’-னு கூப்டாதீங்க..! ‘விராட்’ னே கூப்டுங்க ..!

IPL 2024 : நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக சென்னை அணியும் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோலி பெங்களுருவில் உள்ள ஆர்.சி.பி அணியின் பயிற்சி முகாமிற்கு வந்தடைந்தார். அதே போல நேற்று பெங்களுருவில் நடைபெற்ற ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வின் போது விராட் கோலி மனம் திறந்து பேசி இருந்தார்.

Read More :- IPL 2024: RCB அணியின் பெயர் மாற்றம்… புதிய பெயர் என்ன தெரியுமா?

கிரிக்கெட்டில் அவரது சிறப்பான விளையாட்டால் பல சாதனைகளை செய்த பொது அவரது ரசிகர்களாலும், பல வர்ணனையாளர்களாலும் ‘கிங்’ என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவர் அன்பாக்ஸ் நிகழ்வில் பேசும் போது, “நண்பர்களே, நாங்கள் மிக விரைவாக சென்னைக்கு செல்ல ஆயுத்தமாக இருக்கிறோம். எனவே எங்களுக்கு அதிக நேரம் இல்லை. மேலும், நீங்கள் என்னை ‘கிங்’ என்ற வார்த்தையை கூறி அழைப்பதை நிறுத்துங்கள்.

எனது ரசிகர்கள் என்னை ‘கிங்’ என்று அழைக்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என்று டூபிளெஸ்ஸியிடன் இதை பற்றி பேசி கொண்டிருந்தேன். அதனால் இனிமேல் என்னை ‘கிங்’ என்று அழைக்காமல், ‘விராட்’ என்று அழையுங்கள்.  அந்த வார்த்தையை இனிமேல் பயன்படுத்த வேண்டாம் இது எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது”,  என்று ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வின் போது விராட் கோலி மனமுடைந்து பேசி இருந்தார்.

Read More – பாண்டியாவுக்கு இப்படி ஒரு எதிர்ப்பா.? மோசமாக ட்ரெண்டாகும் ‘RIPHARDIKPANDIYA’ !

இதனால் விராட் கோலியின் ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.  எந்த காரணத்திற்காக அவர்  ‘கிங்’ என்று சொல்லாதீர்கள் என்று சொன்னார்  என்பது தெரியாது. ஆனால் அப்படி அழைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று அவர் கூறியதால் இனி அவரது ரசிகர்கள் கிரிக்கெட் மைதானத்தில் அவர் விளையாடும் பொழுது  ‘கிங்’ என்று அழைக்கமாட்டார்கள் என கருதப்படுகிறது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.