2022 ஆம் ஆண்டில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் ஷ்ரேயஸ் ஐயர் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த 2022ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமாகவே அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆசியக்கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை என இரண்டு முக்கிய தொடர்களில் இந்தியாவிற்கு தோல்வியாக முடிவடைந்தது. ஆனாலும் இந்திய அணியில் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்துள்ளனர்.
இந்த வருடம் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் 1,609 ரன்களுடன் (சராசரி-48.75) முதலிடத்தில் இருக்கிறார். ஒரு சதம் மற்றும் 14 அரைசதம் உட்பட சிறந்த ஸ்கோர் 113* ரன்கள் குவித்துள்ளார். 5 டெஸ்ட்களில் 422 ரன்கள், 17 ஒருநாள் போட்டிகளில் 724 ரன்கள் மற்றும் டி-20 களில் 463 ரன்கள் குவித்திருக்கிறார்.
சூர்யகுமார் யாதவ், 1,424 ரன்களுடன் (சராசரி-46.56) 2-வது இடத்தில் இருக்கிறார். இரண்டு சதம் மற்றும் 9 அரைசதங்கள் உட்பட சிறந்த ஸ்கோர் 117 ரன்கள் குவித்துள்ளார்.இந்த வருடத்தில் சூர்யகுமார், டி-20 போட்டிகளில் இந்தியாவிற்காக 1,164 ரன்கள் குவித்து டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
ரிஷப் பந்த், 1,380 ரன்களுடன் (சராசரி-37.29) 3-வது இடத்தில் இருக்கிறார். இரண்டு சதம் மற்றும் 9 அரைசதங்கள் உட்பட சிறந்த ஸ்கோர் 117 ரன்கள் குவித்துள்ளார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பந்த், இந்த வருடம் 680 ரன்கள் (சராசரி-61.81) குவித்துள்ளார்.
விராட் கோலி இரண்டு சதம் மற்றும் 11 அரைசதங்கள் உட்பட 1,348 ரன்களுடன் (சராசரி-38.51) 4-வது இடத்தில் இருக்கிறார். இந்த வருடம் டி-20 போட்டிகளில் விராட் கோலி, மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பியிருந்தார், குறிப்பாக டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலியின் மேட்ச் வின்னிங் ஆட்டம் யாராலும் மறக்க முடியாதது.
ரோஹித் ஷர்மா 40 இன்னிங்சில், 6 அரைசதங்களுடன் 980 ரன்கள் (சராசரி-27.63) குவித்து 5-வது இடத்தில் இருக்கிறார்.