சமூகத் தொண்டை வாழ்வாகக் கொண்டவர் – கனிமொழி

நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட். 

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 98-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூகத் தொண்டை வாழ்வாகக் கொண்டவர்; பொதுவுடைமை சித்தாந்தத்தின் சிகரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் இன்னும் ஆண்டுகள் பல அவரது சமூகப் பணி தொடர விழைகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment