திமுக வால் தான் சீர்த்திருத்த திருமணம் வந்தது -ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சியில்  தான் சீர்திருத்தத் திருமணங்கள் வந்தது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான் .வைதீக திருமணத்தை நான் எதிர்க்கவில்லை.மேலும் திமுக ஆட்சியில்  தான் சீர்திருத்தத் திருமணங்கள் வந்தது.
தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை .ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது என்று தெரிவித்தார்.