திமுக பிரமுகர் கொலை வழக்கு – நீதிமன்றத்தில் பதுங்கிருந்தவர் கைது!

திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய சதீஷ் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3-ம் தேதி பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் கேன்களை கொண்டுவந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் சவுந்தராஜனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.

இதன்பின் பிராட்வே பேருந்து நிலையத்தில் சவுந்தராஜன் கொல்லப்பட்ட வழக்கில் வசந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், திமுக பிரமுகர் சவுந்தரராஜன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பதுங்கிருந்த அதிமுக பிரமுகர் கணேசனின் மற்றொரு மகனான வழக்கறிஞர் சதிஷ் காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.

ஏற்கனவே, நேற்று இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் கணேசன், அவரது மகன் தினேஷ் குமார் உள்ளிட்ட 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைதானார். சினிமா பாணியில் சுவர் விளம்பரத்துக்கு நடந்த மோதலில் திமுக பிரமுகர் சவுந்தராஜன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்