பெய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளது திமுக – அமைச்சர் கே சி வீரமணி

பெய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது திமுக என்று அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே சி வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2 ஏக்கர் நிலம் தரப்படும், விவசாய கடன், நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றெல்லாம் பெய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது திமுக.
ஆம்பூர் தொகுதியில், சிறுபான்மை மக்கள் அதிகம் வசித்து வருவதன் காரணமாகவே, இங்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. ஜோலார்பேட்டையில் மேம்பாலம் கட்டும் பணி தாமதமாக நடப்பது குறித்து டெண்டர் எடுத்தவர்களிடம், தங்களால் அதிகாரத்துடன் கேட்க முடியாது என்றும் தெரிவித்தார்.