அரண்மனை 4 எடுத்தது அந்த பொண்ணுக்காக தான்? சுந்தர் சியே சொல்லிட்டாரு பாருங்க!

Aranmanai 4  : அரண்மனை 4 திரைப்படத்தை ஒரு பெண்ணுக்காக எடுத்தேன் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி தற்போது அரண்மனை 3 மற்றும் காபி வித் காதல் படங்களின் தோல்வியை தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் அவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா இன்னும் பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்து உள்ளார்.  இந்த திரைப்படத்திற்கான டிரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை சற்று அதிகமாக்கி இருந்தது. ஒரு சிலருக்கு டிரைலர் அந்த அளவிற்கு பிடிக்கவில்லை என்று கூட சொல்லலாம். கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு முறை சுந்தர் சி இரண்டு படங்களை இயக்கவேண்டும் என்று எந்த படத்தை இயக்கலாம் என்று குழப்பத்துடன் விமானத்தில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது இரு பெண் சுந்தர் சியை பார்த்து எப்போது அரண்மனை எடுப்பீர்கள் என்று கேட்டதாம்.

அதற்கு முதலில் சுந்தர் சி காத்திருங்கள் என்பது போல கூறிவிட்டாராம். அதன் பிறகு மற்றோரு பெண் சுந்தர் சியை பார்த்து நான் அரண்மனை படத்தோட பெரிய ரசிகை எப்போது அரண்மனை அடுத்த பாகம் வரும் என்று கேட்டாராம். அந்த பெண் கேட்டவுடன் சுந்தர் சி குழப்பத்தில் இருந்து மீண்டு அரண்மனை 4 படத்தை இயக்க முடிவு செய்தாராம்.  அரண்மனை 4 படத்தை இயக்கி முடித்து தற்போது ரெடியாகியுள்ள நிலையில், இந்த படத்தை அந்த பெண்ணுக்காக தான் எடுத்துள்ளேன் எனவும் சுந்தர் சி பொது மேடை ஒன்றிலும் தெரிவித்து இருக்கிறார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.