கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு …!குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு …!

மோதல் தொடர்பாக கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது  உயர்நீதிமன்றக் கிளை.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதன்பின் அக்டோபர் 3 ஆம் தேதி  நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அக்டோபர் 3 ஆம் தேதி  அதிகாலை கைது செய்ய கருணாஸ் வீட்டிற்கு நெல்லை போலீசார் வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2017-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனால் நெல்லை காவல் துணை காண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டனர்.
Image result for கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு.
இதன் பின் நெல்லையில் காரை சேதப்படுத்தியது பற்றிய வழக்கில் கருணாஸ் முன்ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றக் கிளை கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி  விசாரணை நடத்தியது.
விசாரணைக்கு பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை,சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை, போலீஸ் கைது செய்யாது .
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது  கருணாஸ் வழக்கு.அதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ,  நெல்லையில் 2017-ம் ஆண்டு பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது.அதேபோல்  இந்த வழக்கு தொடர்பாக 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment