நீதிமன்ற அவமதிப்பு வழக்கு …!ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார்…!

அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் வந்தார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.அக்டோபர்  22 -ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர்  அவதூறாக பேசிய வழக்கில் சென்னை வடபழனியில் உள்ள ஹெச்.ராஜாவின் வீடு பூட்டியிருப்பதாக நோட்டீஸ் திரும்பி வந்தது.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் வந்தார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

Leave a Comment