Breaking: பிரபல அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனையில் அனுமதி!

பிரபல அதிமுக எம்எல்ஏ-க்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழாக்கத்தில் இதுவரை 40,698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 367 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திமுக எம்எல்ஏ அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், மற்றோரு எம்எல்ஏ க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.