திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் வருமானம் ரூ.60.95 லட்சம்.!

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.60.95 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி உண்டியல் எண்ணப்பட்டது இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 20ம் தேதி முதல் தற்போது வரை கோயில் நடை மூடப்பட்டுள்ளது பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கோவில் செயல் அலுவலர் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது, காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையர்கள் மற்றும் தூத்துக்குடி ரோஜாலிசுமதா, திருச்செந்தூர் செல்வராஜ் ஆய்வாளர்கள் திருச்செந்தூர் முருகன் ஸ்ரீவைகுண்டம் நம்பி அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி பொது மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர் இதில் நிரந்தர உண்டியல் ரூபாய் 6 லட்சத்து 95 ஆயிரம் 614 கிடைத்துள்ளது.மேலும் 546 கிராம் தங்கமும் 6 கிலோ வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள்

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.