சாலையோரத்தில் மயங்கிவிழுந்து இறந்தவரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிச்சென்ற ஊழியர்கள்!

உத்திரபிரதேச மாநிலத்தில் இறந்தவரின் உடல் அலட்சியமாக குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் 40 வயது  உடைய ஆண் ஒருவர் சாலையின் ஓரம் மயங்கி விழுந்தார்.ஆனால் அங்கு உள்ளவர்கள் மயங்கி விழுந்த நபரின் உடலை பரிசோதித்து பார்த்தார்கள்.ஆனால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் குப்பை வண்டியில் இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர்.அந்த சமயத்தில் அருகில் 3 போலீசார் இருந்தனர்.ஆனாலும் அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.மேலும் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் இறந்தவரின் உடலை எடுக்க மறுத்துவிட்டனர்.இந்த வேளையில் தான் அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்தார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில் இறந்தவர் சாக்சோரா கிராமத்தை சேர்ந்த முகமது அன்வர் என்பது தெரியவந்தது.இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எஸ்.ஐ தேவ் ரஞ்சன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே சம்பவ இடத்தில் இருந்த 3 போலீசார், 4 நகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.