திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.!

சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் 4 பேர் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை பொறுத்தவரை அவர்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் 4 இடங்கள் வரை கேட்கப்படுகிறது. ஆனால், திமுகவை பொறுத்தவரை 2 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கொ.ம.தே.க கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 11 இடங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. எனவே, இந்தமுறை அவர்கள் வாக்கு வங்கி சரிந்திருப்பதால் 2 இடங்கள் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்