பிரணாப் முகர்ஜிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து…!!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாட்டின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது  கிடைத்ததற்காக பிரணாப் முகர்ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளத்தில் இந்தியாவின் தலைசிறந்த அரசியல் மேதையான பிரணாப் முகர்ஜி, நாட்டுக்காக தன்னலம் இல்லாமல் தன்னுடைய சேவையை செய்துள்ளார் என்று தன்னுடைய வாழ்த்துச்செய்தியில் தமிழக முதல்வர் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அவர் கூறுகையில் பிரணாப் முகர்ஜி நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அரசின் பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராகவும் தன்னுடைய பணியை திறம்பட பணியாற்றி இந்தியாவின் குடியரசு தலைவராகவும் இருந்துள்ளார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment