தென்னக இரயில்வே_யில் 6 ஆயிரம் கோடி வருவாய்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

தென்னக ரயில்வேயில் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 6 ஆயிரத்து 150 கோடி ரூபாய் வருவாய் கிடைந்த்துள்ளது என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ் ரெஸ்தா கூறியுள்ளார்.

இந்திய நாட்டின் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை பெரம்பூரில் இருக்கும் ரயில்வே மைதானத்தில் தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் குல்ஸ்ரெஸ்தா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து பின்னர் பேசிய அவர், ஐ.ஆர்.டி.சி சர்வே முடிவின் படி ரயில்கள் இருக்கும் சுகாதாரத்தில் தெற்கு ரயில்வே முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2018-19ஆம் வருட நிதியாண்டில் மட்டும் தெற்கு ரயில்வேயில் சுமார்  6 ஆயிரத்து 150 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக குல்ஸ்ரெஸ்தா பேசினார். மேலும் இந்த வருவாய் கடந்த ஆண்டு வருவாயை விட 9.35 சதவீதம் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment