பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்தது – அமைச்சர் மூர்த்தி

பதிவுத்துறை வருவாய் கடந்த ஆண்டை விட இந்தாண்டு இதே நாளில் ரூ.2,325 கோடி அதிகம் என அமைச்சர் மூர்த்தி தகவல். பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்ததாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் எட்டப்பட்ட ரூ.5,757 கோடியை விட ரூ.2,325 கோடி அதிகமாகும். பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையால் ஆவணங்கள் பதிவு அதிகரித்து அரசுக்கு வரு வருவாய் அதிகரித்துள்ளது. போலி ஆவண பதிவுகளை பதிவுத்துறையே ரத்து செய்யும் … Read more

#Breaking:பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் – தமிழக அரசு!

பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில்,பதிவுத் துறையில் மூலம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை ரூ.4,988.18 வருமானம் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக,இதற்கு முன்னதாக,2021-இல் இதே காலகட்டத்தில் ரூ.2577.43 கோடி கிடைத்த நிலையில்,தற்போது ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விடியா அரசே… அம்மாவின் ஆட்சியில் கருவூலகத்திற்கு முழுமையாக சென்ற இந்த வருவாய்;தற்போதும் செல்ல வேண்டும்”-ஈபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் உள்ள கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை திமுக அரசு களைந்திட வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அம்மாவின் அரசில்,எப்படி கல் குவாரிகளின் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்திற்கு சென்றடைந்ததோ,அதன்படி தற்போதும் கல் குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, இந்த விடியா அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும்,கல் குவாரிகளில் பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைந்திட வேண்டும் என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி … Read more

கடந்த ஆண்டை விட 2522.5 கோடி வருவாய் அதிகரிப்பு – உத்திர பிரதேச முதல்வர்!

கொரோனாவுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டை விட 2522.5 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் மற்றும் பிரச்சனைகள் எழுந்த போதிலும், உத்திர பிரதேச மாநிலத்தில் பொருளாதார இழப்பீடுகளை எதிர்கொள்ளும் வகையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 2522.5 கோடி அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் சுரேஷ் கன்னா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2019 டிசம்பரில் 10,008.2 கோடி வருவாய் வந்ததாகவும், இந்த ஆண்டு 2020 … Read more

ஆட்டோமொபைல் சரக்கு ரயில் போக்குவரத்தால் அதிகரிக்கும் வருவாய்.. கடந்த மாதத்தில் மட்டும் ₹10.13 கோடியாம்!!

ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் சென்னை ரயில்வே கோட்டம், இதுவரை இல்லாதளவில் கடந்த மாதம் மட்டும் 10.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. சென்னை ரயில்வே கோட்டம், கடந்த ஆகஸ்ட் மாதம் 35 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டது. அதன்மூலம், சென்னை ரயில் சென்னை ரயில்வே கோட்டம்கோட்டத்திற்கு சுமார் 10.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது இதுவரை இல்லாதளவு எனவும், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், வெறும் 6.41 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளது. அதில் … Read more

புதுச்சேரிக்கு கொரோனவால் 40% வருவாய் குறைந்துள்ளது- புதுச்சேரி முதல்வர்

கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று புதுச்சேரியில் நிதிநிலை குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா  வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40% வருமானம் குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு இழப்பீட்டை நான்கு மாதமாக தரவில்லை எனவும் 14 சதவீத இழப்பீடு தரவேண்டும் எனவும் 560 கோடி … Read more

தென்னக இரயில்வே_யில் 6 ஆயிரம் கோடி வருவாய்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

தென்னக ரயில்வேயில் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 6 ஆயிரத்து 150 கோடி ரூபாய் வருவாய் கிடைந்த்துள்ளது என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ் ரெஸ்தா கூறியுள்ளார். இந்திய நாட்டின் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை பெரம்பூரில் இருக்கும் ரயில்வே மைதானத்தில் தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் குல்ஸ்ரெஸ்தா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பின்னர் பேசிய அவர், ஐ.ஆர்.டி.சி சர்வே முடிவின் படி ரயில்கள் இருக்கும் சுகாதாரத்தில் தெற்கு … Read more

நாட்டின் வரி வருவாய் உயர்வு…நிதியமைச்சகம் தகவல்…!!

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை உள்ள நடப்பு நிதியாண்டில் , செலுத்தப்பட்ட வரியில், பிடித்தம் செய்து அளிக்கப்பட்ட தொகை, 17 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல் நிகர வரி வசூல், 13 புள்ளி 6 சதவீதம் உயர்ந்து, 7 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து இருப்பதாகவும் , 2018-19ஆம் நிதியாண்டின், நேரடி வரி வசூல் இலக்கான, 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயில், 64 புள்ளி … Read more