காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில்  முதலமைச்சர் கூறுவது தவறு -துரைமுருகன்

காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில்  முதலமைச்சர் கூறுவது தவறு என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன்  கூறுகையில், மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்ற கர்நாடகாவின் கடிதம் குறித்து தமிழக அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் .காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில் திமுக ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் கூறுவது தவறு .
காவிரி நடுவர் மன்றம் அமைத்தது முதல், இடைக்கால தீர்ப்பு கோரியதுவரை திமுகதான் என்று  துரைமுருகன் தெரிவித்துள்ளார்.