தனது தாய்மாமாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

முதல்வர் ஸ்டாலின், கோவில் திருமாளம் எனும் ஊரில் உள்ள தனது தாய் மாமா தெட்சிணாமூர்த்தியை சந்தித்து ஆசி பெற்றார். 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து ஓய்ந்து தற்போது மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.

அதிகளவு மழைபொழிவுக்கு உள்ளான மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், கோவில் திருமாளம் எனும் ஊரில் உள்ள தனது தாய் மாமா தெட்சிணாமூர்த்தியை சந்தித்து ஆசி பெற்றார்.

தெட்சிணாமூர்த்தி அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment