#BREAKING: சீர்காழி, தரங்கம்பாடி – ரூ.1,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு

மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கப்படி வட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பகுதிகளை இன்று ஆய்வு செய்த பின் முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மேலும், கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment