தகுதி வாய்ந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படும்-முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில் இன்று 2-வது நாளாக சிறப்பு குறைதீர்ப்பு  முகாம்  நடைபெற்று வருகிறது.இதில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  தகுதி வாய்ந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படும். 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

தகுதி வாய்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்