முதலமைச்சர் பழனிசாமி யாருக்கும் பொறுப்பு வழங்காதது, அவருடைய தனிப்பட்ட அதிகாரம்- துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

முதலமைச்சர் பழனிசாமி யாருக்கும் பொறுப்பு வழங்காதது, அவருடைய தனிப்பட்ட அதிகாரம் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த 28-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.அவர் அங்கு சென்ற நிலையில் அவரது பொறுப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில்  சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வெளிநாடு பயணத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி யாருக்கும் பொறுப்பு வழங்காதது, அவருடைய தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட முடிவு என்று தெரிவித்துள்ளார்.