நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் சிக்கி கொண்டனர்.

விபத்தில் சிக்கிய 6 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன், பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில்,  சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேலும், வீட்டில் சிலிண்டர் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
murugan

Leave a Comment