#BREAKING: தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு.. கடைக்கு சீல் வைக்க போலீஸ் பரிந்துரை!

தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12ம் வகுப்பு மாணவர் திருமுருகன் (வயது 17) என்பவர் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என அந்த மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார் என தகவல் கூறப்பட்டியிருந்தது. கடந்த 24-ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட … Read more

அதிர்ச்சி.. தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 17 வயது மாணவன் உயிரிழப்பு!

12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடித்துவிட்டு சக நண்பர்களுடன் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு. கடந்த மாதம் கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை … Read more

ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் … Read more

சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு.!

சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுகாமூர் தெருவில் வசித்து வருபவர் முத்தாபாய்(65) . இவர் மீனா(17) என்ற தனது வளர்ப்பு மகளுடன் வசித்து வருகிறார் . இவரது வீட்டின் ஒரு பகுதியில் ஜானகிராமன் (40) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் .  இவர்களுக்கு காமாட்சி என்ற மனைவியும்,  சுரேஷ் மற்றும் ஹேமந்த் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் மீனா … Read more

ஆரணியில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு !

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் பகுதியில் இன்று காலை 07.30 மணி அளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் சிக்கி கொண்டனர். விபத்தில் சிக்கிய 6 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன், பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை … Read more

நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுகாமூர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் சிக்கி கொண்டனர். விபத்தில் சிக்கிய 6 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன், பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில்,  சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம், … Read more