#BREAKING: பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதைத்தொடர்ந்து, பாட்னாவில் இன்று ராஜ்நாத் சிங் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக  மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

நிதிஷ்குமார் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 7-வது முறையாகவும், ஏற்கனவே 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாளை காலை 11.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

 

author avatar
murugan

Leave a Comment