சென்னையில் விதிமீறி பட்டாசு வெடித்த 348 பேர் மீது வழக்கு பதிவு.!

தீபாவளிக்கு விதிமீறி பட்டாசு வெடித்ததால் 348 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி திருநாள் நேற்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தீபாவளி என்றாலே பட்டாசு தான் ஞாபாகத்துக்கு வரும், ஆனால் மாசு கட்டுப்பாடு மற்றும் கொரோனா ஊரடங்கை காரணமாக வைத்து பல மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பட்டாசுகளுக்கு அனுமதி கொடுத்திருந்தாலும், நேரக்கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டுக்கும் விதிமுறைகளுக்கு மதிப்பளிக்காமல் நேற்று பட்டாசு வெடித்த பலர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 348 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

author avatar
murugan

Leave a Comment