மாணவர்களை இனிப்பு வழங்கி வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் …!

பல மாதங்களுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதல்வர் அவர்கள் இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.

கோயம்பேடு விஜயநகர் சந்திப்பில் ரூ.108 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் 1-8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள  நிலையில், சென்னை மடுவன்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பல மாதங்களுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதல்வர் அவர்கள் இனிப்புகளை வழங்கி வரவேற்றார். மேலும், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.