முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் …! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி திமுகவின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,திமுகவின் புகார் மீது முதற்கட்ட விசாரணை எப்போது முடியும்? என லஞ்சஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது. முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு ஜூன் 22-ம் தேதி முதலே திமுகவின் புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்தது.

இதனால் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்கள், பினாமிக்கு வழங்கியதாக முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Image result for வைகோ பழனிசாமி
இந்நிலையில் தினசரி விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை.ஆனால் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது.அதில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 12 ஆம் தேதி ) திமுக சார்பில் தொடரப்பட்ட சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் 1 வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் 3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும்.ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Image result for வைகோ பழனிசாமி
இந்நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறை ஊழல் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Comment