கொரோனா தடுப்பு நடவடிக்கை.! மே மாதம் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1 முதல் 9 வகுப்புகள் படிக்கும் அனைத்து மாணவர்களும் பாஸ் எனவும், மற்ற கல்லூரி தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மே மாதம் 2 முதல் 18 வரை நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகள் ஜூன் மாதம் 19 முதல் ஜூலை 4ஆம் தேதிக்குள் நடைபெறும் என ஐ.சி.ஏ.ஐ அறிவித்துள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.