#Breaking:பொதுக்குழுவுக்கு புறப்பட்ட ஈபிஎஸ்;கடந்த முறை கார்;இந்த முறை?..!

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இந்நிலையில்,எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலிருந்து பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்ல புறப்பட்டுள்ளார்.கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து தாமதமாக சென்ற நிலையில்,அதனை முன் அனுபவமாக எடுத்துக் கொண்ட ஈபிஎஸ்,இந்த முறை 9 மணிக்கு முன்னரே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்ல சற்று முன்னதாக புறப்பட்டுள்ளார்.கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழுவுக்கு காரில் சென்ற ஈபிஎஸ்,தற்போது பிரச்சார வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

அவருக்கு தொண்டர்கள்,ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.மேலும்,ஒற்றைத் தலைமையாக,பொதுச்செயலாளராக ஈபிஎஸ் வரவேண்டும் என்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,இன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு அதன்மூலம் தற்காலிக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தேடுக்கப்படவுள்ளதாகவும், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் அவர்களை நீக்க தனித்தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment