#Breaking:1-9 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து,கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம்? என்று கூறப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்தில் கோடைக்கால விடுமுறைக்கு பிறகு 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளார்.

மேலும்,வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறவுள்ளன என்பது குறித்தும் அமைச்சர் நாளை அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

 

 

Leave a Comment