#BREAKING: எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

தாகத்தை தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு பள்ளிகளில் 1 முத்த 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய … Read more

மாணவர்களே ரெடியா…இன்று முதல் பள்ளிகள் திறப்பு;சனிக்கிழமைகளில் விடுமுறை – இதோ முழு விபரம்!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாணவர் சேர்க்கை: மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,11-ம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும்,12-ம் வகுப்புகளுக்கு … Read more

பள்ளி வாகனத்தில் இது இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பள்ளி வாகனத்தில் கேமரா மற்றும் வேகக்கட்டுப்பாட்டு சாதனம் இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் தமிழகத்தில் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் அம்மாவட்ட ஆட்சியர். இதன்பின் பேசிய அவர், பள்ளி வாகனத்தில் இது இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என கூறினார்.

மாணவர்களே ரெடியா இருங்க! முதல் நாளே இவற்றையெல்லாம் வழங்க ஏற்பாடு!

வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினமே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், … Read more

பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்களுக்கு இந்த வகுப்புகள் தான் – அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் தகவல். தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், திட்டமிட்டபடி … Read more

மாணவர்களே…ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு;அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!

புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.அதன்படி,1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாகவும்,அரசு அறிவித்தப்படி அன்றைய தினமே பள்ளிகளையும் திறக்க வேண்டும், மேலும்,11 ஆம் வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அமைச்சர் அறிவித்துள்ளார். இதனிடையே,ஜூன் 17 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும்,குறிப்பாக,தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் … Read more

#Breaking:1-9 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து,கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம்? என்று கூறப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் கோடைக்கால விடுமுறைக்கு பிறகு 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளார். மேலும்,வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறவுள்ளன … Read more

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி!- மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்!

டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க, மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு. டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் ஆளுநர் அணில் பைஜால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, டெல்லியில் 9-12-ஆம் வாக்குகளுக்கு பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. மற்ற வகுப்புகளுக்கு படிப்படியாக திறக்கப்படும் … Read more

நாளை முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பொது சுகாதாரத்துறை!

நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர்  முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி முதல் (நாளை) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என … Read more

இன்று முதல் பஞ்சாபில் பள்ளிகள் திறப்பு…!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறப்பதற்கு பஞ்சாப் அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒவ்வொரு நாடுகளிலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் கொரோனா பரவல் அதிகரித்ததன் … Read more