#BREAKING : அமித்ஷாவிடம் பேசியது என்ன…? ஈபிஎஸ் விளக்கம்…!

அமித்ஷாவை மரியாதையின் நிமித்தமாக சந்தித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். 

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், டெல்லியில் உள்ள நாடாளுமனற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.

இந்நிலையில், அமித்ஷாவிடம் பேசியது தொடர்பாக செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அமித்ஷாவை மரியாதையின் நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், பிரதமரிடம் என்னென்ன பேசினோம் என்று தான் அமித்ஷாவைதாம் கூறியதாகவும், அவரிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.