#BREAKING: தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது!

வங்கக்கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ், புயலாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயல் மாண்டஸ் வலுகுறைந்து, சாதாரண புயலாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 180 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 260 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்த நிலையில்,  புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.  மாண்டஸ் புயல் இன்றிரவு முதல் நாளை காலை வரை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment