#BREAKING : தீபாவளிக்கு டாஸ்மாக்கில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை…!

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ரூ. 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ரூ. 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 3-ஆம் தேதி 205.61 கோடிக்கும், 4-ஆம் தேதி 225.42 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், மதுரை மண்டலத்தில் ரூ.98.89, திருச்சி மண்டலத்தில் ரூ.89.95, சேலம் மண்டலத்தில் ரூ.87.89 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த தீபாவளி விற்பனை, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ரூ.35 கோடி ரூபாய் விற்பனை குறைவு என கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.