இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு;221 பேர் இறப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 221 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,33,754 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 100 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,43,33,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 221 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,59,873 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,165 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,37,24,959 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,48,922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 1,07,70,46,116 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.