இல்லத்தரசிகளுக்கு செம்ம ஷாக்..கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை – சவரனுக்‍கு ரூ.424 உயர்வு!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.36,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு.ஏனெனில்,தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் தங்கம் விலை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.36,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல,22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்,சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 உயர்ந்து ரூ.68.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.