#BREAKING: வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலர் பரிசீலித்து 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதையும் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment